Wednesday, December 14, 2022

3 - நளனும்..அன்னமும்


 


அந்த அன்னப் பறவையால் ,பசுமையான அந்த சோலை நிறம் மாறி வெண்மை நிறம் பெற்றது என்று சொல்லும்படி அதன் சிறகுகள் வெண்மையாகக் காட்சி தந்தன.

அதன் தாள் நிறத்தால் பொய்கையின் தலம் சிவப்பு பெற்றது.

இது கண்டு..சிலையையொத்த அழகுடன் தன்னை சுற்றி நின்ர பெண்களிடம், "அந்த அன்னப் பறவையை பிடித்து வாஉம்கள்" என்று கூறினான்.

ஒரு மயில் கூட்டமே சென்று அன்னத்தை வளைத்து பிடிப்பது போல இருந்த்து அந்தக் காட்சி.அவர்கள் அன்னத்தை நளன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

தன்னை இவர்கள் ஏன் பிடித்து வந்தார்கள் என அந்த அன்னத்திற்கு விளங்கவில்லை.தன் கூட்டத்தோடு கூடி இருந்து மகிழும் பறவை அது.இப்போது தனித்து விடப்பட்டதால்..சுற்றுமுற்றும் தனது சுற்றமாகிய அன்னப்பறவை ஏதேனும் அங்கு தென்படுகிறதா என்று பார்த்த்து.எதையும் காணாததால் அதன் உடல் அச்சத்தில் நடுங்கியது.

அதைக் கண்டு நளன் அதனிடம் கூறினான்..

"அன்னமே அஞ்சாதே! நான் உன்னை பிடித்து வரச்சொன்னது உன் அழகிய நடையைப் பார்த்துதான்.கவிஞர்கள் மகளிரின் நடைக்கு உன் நடையை ஒப்பிட்டு சொல்வார்கள்.எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது.அழகிய உன் நடை சிறந்ததா அல்லது மாட்சிமை மிக்க மகளிரின் நடை சிறந்ததா? என ஒப்பிட்டு காணவே பிடித்து வரச் சொன்னேன்.இதில் தவறேதும் இல்லை" என்றான்.

அன்னத்தின் அருகே,அதனை பிடித்து வந்திருந்த அழகான பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.அந்த அழகி பார்ப்பதற்கு திருமகள் போல இருந்தாள்.அவள் அருகில் நிற்க, அன்னத்திற்கு அந்த சூழ்நிலை மகிழ்ச்சியினை அளித்தது.

நளன் மகளிர்பால் நாட்டம் உடையவன் என்பதை அறிந்த்து.காதல் செய்யும் காளை அவன் என அறிந்தது.தவிர்த்து,அவன் இரக்கம் உள்ளவன் என்பதனையும் அறிந்தது.

"தண்ணனியாள்" (தண்மையான இரக்கத்தினை கொண்டுள்ளவன்)என அவனைப்  பற்றி முடிவு செய்த்து.அவனுக்கு ஏற்றவள் யார்? என யோசித்தது.

அதற்கு தமயந்தியின் நினைவு வந்த்து.அவளது அழகிய நடை..அவனைக் கவரும் என முடிவு செய்தது.மூங்கில் போன்ற தோள்களை உயையவள் அவள்.அவள் தோள்களை தழுவுவதற்கு ஏற்றவன் அவன் என முடிவு செய்தது.

"புகழ்மிக்க அரசனே! உனது பருத்த தோள்களுக்கு ஏற்றவள்.சிறுத்த நெற்றியினை உடைய தமயந்தி என்பவள் இருக்கிறாள்.அவள்தான் உனக்கு ஏற்றவள்" என்றது.

காதல் விருப்பு அவனுக்கு எழுந்த்து.அன்னத்தின் சொற்கள் அவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.வேட்கையைத் தூண்டின.அவளை, அவன் தன் இதயத்தில் இருத்தினான்.கன்னி அவள் அவனது மனக்கோயிலில் இடம் பெற்றாள்.

மன்மதன் ஆவலைத் தூண்டிவிட தன் மனதை அடக்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.


மயிலே  வந்து நடனமாடுவது போல அவளை,அவன்..அதன் சொற்களில் கண்டான்.தமயந்தியின் மென்மையான சாயல் அவனைக் கவர்ந்த்து."மயில் அணையாள்..யார் மகள் அவள்?"என ஆர்வத்துடன் கேட்டான்.

அவள் அரசர் மகளா? தெய்வ மகளா? என ஐயம் ஏற்பட்டது.

அரசர் மகள் என்றால்..அவள் தந்தை யார்?நாடு எது? என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது.ஊர்,பெயர் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என ஆவல் கொண்டான்.

"விதர்ப்பன் மகள்" என அன்னம் சொன்னது.

பேரரசன் மகள் அவள் என்பதை அறிந்து கோண்டான்.

ஆனால் அவளை அடைவது எப்படி?  

No comments:

Post a Comment