Tuesday, July 11, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்- 2 (தொடர்)

 


1970ஆம் ஆண்டு...
மாலை மணி 6
வீட்டுக்கு உள்ளேயும்..வெளியேயும் குட்டிப் போட்ட பூனையாய் பலமுறை அலைந்து கொண்டிருந்தார் சபேசன்.
"வரவ..உள்ளே வரப் போறா..?" எதுக்கு இப்படி டென்ஷனோட லைஞ்சுக் கிட்டு இருக்கீங்க.கொஞ்சம் உட்காருங்க..ஒரு வாய் காஃபி தரேன் சாப்பிடுங்க.." என்றாள் சபேசனின் மணைவி சந்திரா.
"ஆமாம்..இந்த முரளி பய எங்கே போயிருக்கான்..ஆளையேக் காணுமே"
"நாந்தான்...வரவாளுக்கு கொடுக்க வெத்தலை கூட இல்லையே.ஒரு கவுளி வைத்தலையும், அசோகா பொட்டலம் பாக்கும் வாங்கி வரச் சொல்லியிருக்கேன்"
"ஆமாம் பொட்டலம் பாக்கு எதுக்கு..ரசிக்லால் வாங்கி வரச் சொல்லி இருக்கலாமே"
"சொல்லியிருக்கலாம்.ஆனா..அவா கிளம்பறச்சே தாம்பூலம் கொடுக்கறப்போ பாக்கைலூசாவா கொடுக்க முடியும்?" அடுக்களையில் இருந்த படியே குரல் கொடுத்தாள் சந்திரா.
சபேசன்..ஒரு தனி்யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.ஓரளவு சம்பளம் வந்த்து.
சீதா..அவரது மூத்த மகள் 25 வயது.டிகிரி முடித்து விட்டு டெலிஃபோன் ஆபரேட்டராக வேலை செய்கிறாள்.அவளுக்கு அடுத்து 6வருடங்கள் கழித்து பிறந்தவன் முரளி. பி.காம்.இறுதி ஆண்டு படிக்கிறான்.
சீதாவை பெண் பார்க்க வருகிறார்கள் அன்று.மாப்பிள்ளை ராமதுரை ஒரு வங்கியில் பணி புரிபவன்.
ஒரு நண்பர் மூலம் ராமதுரையின் வரன் வர..சீதாவின் ஜாதகத்துடன் பொருந்தியிருந்ததால்...பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க அன்று மாலை 7 மணிக்கு பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்கள்.
பையனின் தந்தையும் ஒரு வங்கி ஊழியர்.
இந்த அரசாங்க உத்தியோகமும் சரி, வங்கி வேலையும் சரி அவரவர் வாரிசுகளுக்கு அங்கங்கேயே வேலை கிடைப்பதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை..என்று நினத்த சபேசன்..முரளிக்காவது ஒரு வங்கியில் வேலை கிடைத்தால் நன்றாய் இருக்கும் என அந்த நிலையிலும் நினைத்தார்.
"அம்மா..உன்னைப் பார்க்க..மாப்பிள்ளை வீட்டார் வரேன்னு சொல்லியிருக்காங்க.சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடு"ன்னு பொண்ணு கிட்ட படிச்சு..படிச்சு சொல்லியும் இன்னமும் அவள் வரவில்லையே என்ற கவலையுடன் இருந்தார் ."பெத்தவங்க அவஸ்தை குழந்தைகளுக்கு எங்கே தெரியறது"
"பஜ்ஜியும், கேசரியும்..ரெடி.காஃபி டிகாக்ஷன் போட்டு வைச்சுட்டேன்"என்றபடியே தன் கைகளை புடவைத்தலைப்பில் துடைத்த படியே வந்த சந்திரா.."நான் போய் முகத்தை அலம்பிட்டு..ஒரு நல்ல புடவையாய் கட்டிட்டு வந்துடறேன்.அதுக்குள்ள நீங்க..வரவா உட்கார நாற்காலியெல்லாம் சரி பண்ணுங்க.டீபாய்ல இருக்கற பேப்பர்.மேகசினியயெல்லாம் ஒழுங்கா அடிக்கி வையுங்க.."என்றவள்.சபேசனிடமிருந்து எந்த பதிலும் வராததால்.."ஏண்ணாா..உங்களைத்தானே" என்றாள்.
சகஜ நிலைக்கு வந்த சபேசன்.."ம்..ம்" என்றார்.
"என்ன யோசனை உங்களுக்கு கவலைப்படாதீங்க.சீதா சரியான நேரத்துக்கு வந்துடுவா"ஏன்று சொல்லிக் கொண்டிருந்த போதே ,சீதா உள்ளே நுழைந்தாள்.
"என்னம்ம..ரொம்ப லேட்டாயிடுத்தே..சரி..சரி..சீக்கிரம் ரெடியாயிக்கோ..அவா எல்லாம் 7 மணிக்கு வந்துடுவா" என்றார் சபேசன்.
அப்போது முரளியும்..வெற்றிலை,பாக்கு வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
(தொடரும்)

No comments:

Post a Comment