Saturday, January 11, 2020

26 - மயில்வாகனனுக்கு ஒரு எச்சரிக்கை

மயில்வாகனன், குப்பால் மூலம் பூங்குளம் கிராமத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும், கற்பகத்திடம் அவன் ஆட்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள எதிர்வினைகளையும் கேட்டு அறிந்தான்.

அதனால், தாமோதரன் எந்த நேரமும் அங்கு வரலாம் என எண்ணினான்.அப்படி அவன் வரும் போது..குப்பால் அங்கு இருக்கக் கூடாது என்றும், அடுத்து உள்ள அறையில் ஒளிந்து கொள்ளுமாறும் கூறினான்.

மயில்வாகனன் எண்ணியபடியே..தாமோதரன் ஆவேசத்துடன் மயில்வாகனன் வீட்டின்முன் நின்று கொண்டிருந்த அல்லக்கைகள் தடுத்தும்..அவர்களை ஒதுக்கி விட்டு உள்ளே நுழந்து.."மயில்வாகனா..மயில்வாகனா..: என உரக்கக் குரல் கொடுத்தான்.

"என்ன தாமோதரா...மரியாதை இல்லாமல் பெயர் சொல்லிக் கூப்பிடறே" என்றவாறே வெளியே வந்தான் மயில்வாகனன்.

"மரியாதையா...நீ செஞ்ச காரியத்துக்கு மரியாதை வேறயா? சே..உன்னைப் போய்..உனக்குப் போய் என் உயிரைக் கூடக் கொடுப்பேன்னு சொன்னேனே...அன்னிக்கே என் பொண்ணு சொன்னா..அவகிட்ட..ஒருநாளாவது ஒருநாளாவது உன் மனைவியா இருக்க முடியுமா?ன்னு கேட்டேன்னு..ஆனா நான் தான் உன் மேல இருந்த நம்பிக்கையில..என் தலைவன் ரொம்ப நல்லவன்..அப்படி எல்லாம் கேட்டு இருக்க மாட்டார்னு சொன்னேன்"

"உன் பொண்ணு கிட்ட நான் அப்படிக் கேட்டேனா?..இல்லையே!"

"படுபாவி..செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா?,,,நீ உருப்புடுவியா?"

"ஓஹோ..எனக்கு சாபம் கொடுக்கிறியா...எங்களை மாதிரி அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு பேர் சாபம் கொடுக்கறாங்க...அந்த சாபமெல்லாம் பலிக்காதுடா..நாங்க எல்லாம் அந்த ஆண்டவன் மாதிரி...
ஆண்டவனே! உனக்குக் கண் இல்லையா?உன் மனசு கல்லா?ன்னு கடவுளை நிந்திக்கிற பக்தன் கூட அடுத்த நிமிஷமே..ஆண்டவா காப்பாத்துன்னு வேண்டிக்கிறாப்போல, அரசியல்வாதிங்களை நீங்க எல்லாம் எவ்வளவு திட்டினாலும்..எவ்வளவு சாபம் கொடுத்தாலும்..உங்களுக்குக் காரியம் ஆகணும்னா எங்கக் கிட்டதான் திரும்பி வருவீங்க.இப்ப சொல்லு..உன் பொண்ணு கிட்ட நான் அப்படிக் கேட்டு இருப்பேன்னு நீ நம்பறியா?"

"முதல்ல நான் நம்பல.ஆனா...நேத்து நீ உன் கூலிப்படையை அனுப்பி..அவளைக் கடத்தி..நல்லவேளை..அவகூட படிக்கிற அந்த வாஞ்சித் தம்பி இருந்ததால பொழச்சா"

"நான் ஆட்களை அனுப்பி உன் பொண்ணை கடத்த முயற்சித்தேனா...நல்ல ஜோக்.இதோ பாரு தாமோதரா, நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.நான் நெனச்சா பெரிய சினிமா நடிகைகள் எல்லாம் என் ஆசைக்கு வரத் தயாரா இருக்காங்க. அதையெல்லாம் விட்டுட்டு கேவலம் உன் பொண்ணை...ச்சீ..இதைச் சொல்ல உனக்கு நாக்குக் கூசலை"

"அப்போ..என் பொண்ணு பொய் சொல்றான்னு சொல்றியா?"

"அதை நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கணுமா?"

"என் பொண்ணு பொய் சொல்லமாட்டா.உன்னைப் பத்தி நான் எல்லாத்தையும் கேள்விப் பட்டுட்டேன்.இப்ப சொல்றேன் கேட்டுக்க..நீ எவ்வளவு பெரிய ஆளா வேணும்னாலும் இருக்கலாம்.என்ன வைச்சு எங்க ஆட்களை அடக்க நினைக்கலாம்.ஆனா என்னை மிரட்டி உன் தேவையெல்லாம் நிறைவேத்திக்கலாம்னு நெனச்சே..இது வைரம் பாஞ்ச உடம்பு.உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன்.சட்டப்படி உன்னை உள்ளே தள்ளிடுவேன்"

"ஓஹோ புரிஞ்சுப் போச்சு...உன் பொண்ணோட ஃபிரண்ட்...அவனோட தாத்தா ஒரு பெரிய வக்கீல்...அது என்ன சொல்றது...ம்...பாரிஸ்டர்..அவர் இருக்கற தைரியத்துல சொல்றியா? என்ன அபப்டிப் பார்க்கறே! எனக்கு எல்லாமேத் தெரியும்..ஒருத்தர் மேல நான் ஆசைப்பட்டுட்டா அவங்களைப் பத்தின முழு விவரமும் கலெக்ட் பண்ணிடுவேன்..தாமோதரா..என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றியே. நம்ம அப்ரோச்சே வேற.உன் பொண்ணோட ஃபிரண்ட்  அந்தப் பையனை எதாவது காரணத்தைக் காட்டி அரெஸ்ட் பண்ண வைச்சுடறேன்..பாக்கறியா..எனக்கு இந்த மேட்டர் எல்லாம் ஜுஜுபி...அப்பறம் அவனைக் காப்பாத்தவே அவன் தாத்தாவுக்கு நேரம் சரியா இருக்கும்..உம் பொண்ணை எப்படிக் காப்பாத்துவார் சொல்லு?"

"டேய்..மயில்வாகனா..உனக்குக் கடைசியாச் சொல்றேன்..நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டுப் போ..ஆனா, என் கிட்டேயோ..இல்லை..என் பொண்ணுக் கிட்டேயோ எசகுபிசகா ஏதாவது நடந்துண்டா..உன்னை அழிச்சுடுவேன்..ஜாக்கிரதை...நாங்க பணக்காரங்க இல்லதான்..என்னால உன்னைப்போல பணத்தால சாதிக்க முடியாதுதான்..ஆனா...உடம்பால முடியும்.உன் பணம் சாதிக்க முடியாததை..என் உடம்பு சாதிக்கும்.இப்போதைக்கு இதைத்தான் சொல்லுவேன்..ஜாக்கிரதை" என மயில்வாகனனை எச்சரித்து விட்டு தாமோதரன் செல்ல, மயில்வாகனன் அடுத்த அறையில் ஒளிந்திருந்த குப்பாலை அழைத்தான்.

"குப்பால்..நடந்ததை எல்லாம் பார்த்த இல்ல..நாளைக்கு உங்க கிராமம்  முழுக்க போராட்டம் நடத்தப் போறாங்க.அந்த போராட்டத்துல இந்த தாமோதரனும் கலந்துப்பான்.நான் அஞ்சு லாரி ஆட்களை அனுப்பறேன்.அவங்க போராட்டக்காரங்களோட நுழஞ்சு குழப்பத்தை உண்டாக்குவாங்க! அந்த சமயம் பார்த்து நீ தாமோதரனை போட்டுடு.இதை மட்டும் நீ செஞ்சா...உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்யறேன்"

"சரி தலைவரே! நான் வேலையை முடிச்சுட்டு வந்து உங்களை சந்திக்கறேன்.வரட்டா" என்று சொல்லிவிட்டு குப்பால் வெளியேறினான்.

"டேய் தாமோதரா! என் கிட்டயா வாலாட்டற..நான் யாருன்னு உனக்குக் காட்டறேன்" என்ற படியே மயில்வாகனன் அமர்ந்தான்.

No comments:

Post a Comment