Sunday, January 19, 2020

34 - சிதைக்கப்பட்ட கற்பகம்

மயில்வாகனனுக்கு அன்று காலை எழுந்தது முதலே கற்பகத்தின் ஞாபகமாகவே இருந்தது.இவ்வளவு நாளாக அவன் ஆசைப்பட்ட எந்தப் பெண்ணையும் விட்டு வைத்ததில்லை.

உடனே பூங்குளம் சென்று, கற்பகத்தைப் பார்த்து...தாமோதரன் மீது தான் போட்ட வழக்கை வாபஸ் வாங்குவதாகக் கூறி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மயில்வாகனன்.

உடன் பூங்குளம் செல்ல தனது காரை தயார் செய்யச் சொன்னான்.

இந்நிலையில், தாமோதரனின் பூங்குளம் நிலத்தில் ..கூலி வேலை செய்யும் ஆட்களை ,அதிகாரி போல இருந்தவன், வேலி அமைக்கும் வேலை வாங்கி வந்தான்.

காலையில் வெளிக்கு வந்த மூக்கன் ,அதைப்பார்த்து கற்பகத்தைப் பார்க்க ஓடோடி வந்தான்.

எரிந்த  சாம்பலான இடத்திலேயே ஒரு குடிசை வீடு கட்டி இருந்தான் தாமோதரன்.அன்று புதன் கிழமை என்பதால் பக்கத்து கிராமத்து காவல் நிலையத்தில் கையெழுத்திட தாமோதரன் சென்றிருந்தான்.

கற்பகம் வீட்டின் ஒரு மூலையில் முடங்கி இருந்தாள்.
"கற்பகம்..கற்பகம்.." எனக் கூவியபடியே வந்த மூக்கனைப் பார்த்ததும், "என்ன் பெரியப்பா? என்ன விஷயம்..ஏன் பதட்டமாய்ருக்கீங்க?" என்றாள்.

"அம்மா...நம்ம நிலத்திலே ஏதோ கெமிகல் ஃபேக்டரின்னு போர்டு போட்டு..ஆட்கள் வேலி போட்டுக்கிட்டு இருக்காங்க" என்றான் மூக்கன்.

"அப்படியா? நாமதான் நம்ம நிலத்தை விற்கமுடியாதுன்னு சொல்லிட்டோமே"

"சொல்லிட்டோம்..ஆனா..இப்ப அபகரிச்சுட்டாங்க.நம்ம நிலத்தை மட்டுமில்லம்மா.சுத்தியிருக்கிற செங்கோடன் நிலம்,ஆனந்தன் நிலம்னு எல்லாமே போச்சும்மா"

"பெரியப்பா..என் கூட கொஞ்சம் தஞ்சாவூர் வரைக்கும் வர முடியுமா?நம்ம வாஞ்சியைப் பார்த்து இதுக்கு உடனடியா தடை உத்தரவு வாங்கணும்"

அவள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே..மயில்வாகனன் வீட்டிற்குள் நுழைந்தான்."பேஷ்..தடை உத்தரவு வாங்கப் போறியா?வாங்கு..வாங்கு..உடனே வாங்கு...கற்பகம்...இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான்..வெத்து ஸ்டாம்ப் பேப்பர்ல உங்கப்பன் கிட்ட சில கையெழுத்துகளை வாங்கி வைச்சேன்.இப்ப, அதுல உங்கப்பா என்னோட உதவியாளருக்கு நிலத்தை விற்க பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்ததா செட்டப் பண்ணிட்டேன்.இப்ப என்ன பண்ணுவ?..
இதோ பாரு கற்பகம், இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை..நான் முன்ன ஒரு விஷயம் சொன்னேனே..ஞாபகமிருக்கா..ஒரு தடவை...ஒரே தடவைன்னு..அதுக்கு "சரி"ன்னு சொல்லிடு..எனக்கு கோஆபரேட் பண்ணு..அதே அளவு நிலத்தை வேற எடத்துல வாங்கிக் கொடுத்துடறேன்.உங்கப்பாவையும் வழக்கிலிருந்து விடுவிச்சுடறேன்,,என்ன சொல்ற.."

"மிஸ்டர்...மிஸ்டர் என்ன மிஸ்டர் உனக்கு..டேய்..மயில்வாகனா..பேசி முடிச்சுட்டியா?உன் கிட்ட இருந்து எங்க நெலத்தை எப்படி மீட்கறதுன்னு எங்களுக்குத் தெரியும்.இப்போ நீ வெளியே போகலாம்"

மயில்வாகனன்  கோபமாக "கற்பகம்" என கத்தினான்.

"கெட் அவுட்" - கற்பகம்

சற்றே கோபத்தை அடக்கிய மயில், "கற்பகம் நான் என்ன சொல்ல வரேன்னா" என்றான்.

"ச்சீ வெளியே போடா.." என்றவள் , மூக்கனைப் பார்த்து, "பெரியப்பா..நீங்க உடனே எங்கப்பாவை இங்க வரச் சொல்லுங்க" என்றாள்.

"இந்த நேரத்துல என்னைப் போகச் சொல்றியே அம்மா" என்ற மூக்கன், தயங்கி நிற்க..

"மூக்கா..பாப்பா சொல்லுது இல்ல..போ..போய் அவ அப்பன் கிட்ட குழந்தை கூப்புடுதுன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வா" என்றான் மயில்வாகனன்.

"மூக்கனிடம், கற்பகம், "பெரியப்பா...என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க.தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்த மூணும் ஒருத்தரைக் காப்பாத்தி வழி நடத்தும்னு சொல்லுவாங்க.என் கிட்ட இந்த மூணும் இருக்கு.என்னை, இவனால ஒன்னும் செய்ய முடியாது"

மூக்கன் தயங்கியபடியே வெளியே செல்ல...

மயில்வாகனன், கற்பகத்திடம் "நீ சொன்னியே..அது ரொம்ப சரி.தன்னம்பிக்கை...எனக்கு ரொம்ப அதிகம்.தெளிவு..கேட்கவே வேண்டாம்.துணிச்சல்...நான் எல்லா விஷயத்திலேயும் துணிச்சல்காரன். ஆனா ..பாவம்.உனக்கு தன்னம்பிக்கையும் கிடையாது.தெளிவான அறிவும் இல்லை..துணிச்சல்..அது அதிகமாகவே இருக்கு...ஆனா..என்ன ஒண்ணு அசட்டுத் துணிச்சல்.இப்போ நமக்குள்ள இடைஞ்சலா இருந்தது அந்த மூக்கன்தான்.அவனையும், உன் அசட்டுத் துனிச்சல் வெளியே அனுப்பிடுச்சு.இப்போ...நானும்..நீயும்தான்.வா....வாடி" என்ற படியே கற்பகத்தின் கையைப் பற்றி இழுத்தான்.

அவன் கையை உதறிய கற்பகம், "மரியாதையா வெளியே போயிடு..இல்ல...கூச்சல் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்" என்றாள்.

"கூச்சல் போடுவியா...தாராளமா போடு" என்றபடியே , மயில்வாகனன் அவளைக் கட்டிப்பிடிக்க முயல, கற்பகம் கைகளைக் கூப்பியபடி, "உன்னைக் கையெடுத்து கும்படறேன்..என்னை விட்டுடு.." என் அழ ஆரம்பித்தாள்.

"அவ்வளவு பேசின...இப்ப..எங்கே போச்சு உன் தன்னம்பிக்கை" என்ற படியே..அவளை முரட்டுத்தனமாக அணைத்த மயில்வாகனன்..முதலில் தாவணியை இழுத்தான்..

சிறிது நேரம் ஆர்ப்பாட்டம், அழுகை ..கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தம்..

சிறிது நேரம் கழித்து, கலைந்த வேட்டியை..எடுத்துக் கட்டிக்கொண்டு வெளியே தன் காருக்கு வந்த மயில்வாகனன்..சிறு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.

வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து..கலைந்த உடைகளுடன் அழுதுக் கொண்டிருந்த கற்பகத்திடம்.."உனக்கு பேரழகின்னு நினைப்பு.அதனாலத்தான் இவ்வளவு திமிர்..ஆர்ப்பாட்டம்.இன்னமும்..உன்னை இதே அழகோட விட்டா..நான் தெளிவில்லாதவன்,துணிச்சல் இல்லாதவன் ஆகிடுவேன்.அதனால், இப்ப நான் உன் அழகை அழிக்கணுமே....அதுக்கு நான் என்ன செய்யப்போறேன் தெரியுமா..?

ஆசிட்....திராவகம்..இதை உன் முகத்துல கொட்டப் போறேன்..அப்பறம்..அப்பறம்..இந்த அழகு உனக்கு அழிஞ்சுடும்" என்றபடியே..அந்தக் கண்ணாடிக் குடுவையைத் திறந்து..திராவகத்தை அவள் முகத்தில் கொட்டினான்.

"ஐயய்யோ..எரியுதே...எரியுதே..'துடி துடித்து ..இங்கும் ..அங்கும் புரண்டாள் கற்பகம்..

ஆனால்..மயில்வாகனனோ...மெதுவாக..வெளியே வந்து காரில் ஏறி விரைந்தான்.

No comments:

Post a Comment