பல ஆண்டுகளுக்கு முன்னால்.
.மரகதப்பட்டுடுத்தி..பச்சைபசேல் என வளமாகக் காணப்பட்ட பூங்குளத்து வயல்கள் இன்று கான்கிரீட் கட்டடங்களைத் தாக்கி நிற்கின்றன.
மாடசாமியின் வண்டி ஒன்றினையே நம்பி இருந்த மக்களுக்கு ,இப்போது டவுன்பஸ் வசதி வந்து விட்டது.
அடிப்படை வசதி கூட இல்லாததாலும், அரசியல்வாதிகள் தலையீட்டாலும் பழைய பூங்குளம் மரணித்துவிட்டது.
கிராமங்கள் எல்லாம் இப்படி உருமாறி வரக் காரணம் என்ன..
மக்கள் தொகைப் பெருக்கமா?
தொழிற்சாலைகள் அதிகரிப்பா?
அரசியல்வாதிகளா?
விவசாயிகள் விவசாயத்தை கைவிடத் தொடங்கிவிட்டதா?
விவசாயிகள் வறுமையா?
இப்படி பல காரணங்களை கேட்டுக் கொண்டேப் போனாலும்..பூங்குளத்தின் இன்றைய நிலையை இனிவரும் நாட்களில் எந்த கிராமமும் அடையக்கூடாது.
இந்தியாவின் அழகு கிராமங்களில்தான் இருக்கிறது என்ற அண்ணலின் வாய்மொழியை பொய்யாக்கி விட வேண்டாம்/
இருங்கள்..இருங்கள்...
பூங்குளத்தில் இன்று என்ன விசேஷம்..
ஒரே பாடல், ஆடல்..வாழ்க கோஷம்..என்ன கொண்டாட்டம்..
வார சந்தை நடக்கும் திடலில்..ஒரு அர்சியல்கட்சி கூட்டம் நடக்கிறார் போல் இருக்கிறது.
கெமிகல், கார் தொழிற்சாலைகள் முன் பல கட்சிக் கொடிகள்..பலவேறு கட்சி சார்பு தொழிலாளர்கள் யூனியன்கள் வந்ததைத் தெரிவிக்கின்றன..
அதோ..யாரோ ஒருவர் தனித்து இருக்கிறாரே! அவர் யார்..தெரிந்த முகமாய் இருக்கிறது...
அருகில் சென்று பார்த்தால்..அட.. நம்ம மூக்கன்..அவனையேக் கேட்போம்.
"மூக்கா! இன்று பூங்குளத்தில் என்ன விசேஷம்"
"மயில்வாகனன் கட்சி ஆஃபீஸ் திறக்கிறான்.தேரடியை ஒட்டி கட்சிக் கம்பம் நிறுவி கட்சிக் கொடியை பறக்க விடுகிறான்.குப்பால் அந்த வட்டத்துக்கு செயலாளர் பொறுப்பினை ஏற்கிறான்" என்றான் .
"தாமோதரன் எப்படியிருக்கிறான்.விடுதலை ஆகி வந்தாச்சா"
"தாமோதரன்..நான்..எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறோம் பட்டடைக்கல்லாக" என்றான் மூக்கன்.
பட்டடைக்கற்கள் அறிவதில்லை..தன்னை உபயோகப்படுத்தி..தன் இனத்தையே இஷ்டத்திற்கு வளைக்க காரணமாக தாங்களே இருப்பதை.
.மரகதப்பட்டுடுத்தி..பச்சைபசேல் என வளமாகக் காணப்பட்ட பூங்குளத்து வயல்கள் இன்று கான்கிரீட் கட்டடங்களைத் தாக்கி நிற்கின்றன.
மாடசாமியின் வண்டி ஒன்றினையே நம்பி இருந்த மக்களுக்கு ,இப்போது டவுன்பஸ் வசதி வந்து விட்டது.
அடிப்படை வசதி கூட இல்லாததாலும், அரசியல்வாதிகள் தலையீட்டாலும் பழைய பூங்குளம் மரணித்துவிட்டது.
கிராமங்கள் எல்லாம் இப்படி உருமாறி வரக் காரணம் என்ன..
மக்கள் தொகைப் பெருக்கமா?
தொழிற்சாலைகள் அதிகரிப்பா?
அரசியல்வாதிகளா?
விவசாயிகள் விவசாயத்தை கைவிடத் தொடங்கிவிட்டதா?
விவசாயிகள் வறுமையா?
இப்படி பல காரணங்களை கேட்டுக் கொண்டேப் போனாலும்..பூங்குளத்தின் இன்றைய நிலையை இனிவரும் நாட்களில் எந்த கிராமமும் அடையக்கூடாது.
இந்தியாவின் அழகு கிராமங்களில்தான் இருக்கிறது என்ற அண்ணலின் வாய்மொழியை பொய்யாக்கி விட வேண்டாம்/
இருங்கள்..இருங்கள்...
பூங்குளத்தில் இன்று என்ன விசேஷம்..
ஒரே பாடல், ஆடல்..வாழ்க கோஷம்..என்ன கொண்டாட்டம்..
வார சந்தை நடக்கும் திடலில்..ஒரு அர்சியல்கட்சி கூட்டம் நடக்கிறார் போல் இருக்கிறது.
கெமிகல், கார் தொழிற்சாலைகள் முன் பல கட்சிக் கொடிகள்..பலவேறு கட்சி சார்பு தொழிலாளர்கள் யூனியன்கள் வந்ததைத் தெரிவிக்கின்றன..
அதோ..யாரோ ஒருவர் தனித்து இருக்கிறாரே! அவர் யார்..தெரிந்த முகமாய் இருக்கிறது...
அருகில் சென்று பார்த்தால்..அட.. நம்ம மூக்கன்..அவனையேக் கேட்போம்.
"மூக்கா! இன்று பூங்குளத்தில் என்ன விசேஷம்"
"மயில்வாகனன் கட்சி ஆஃபீஸ் திறக்கிறான்.தேரடியை ஒட்டி கட்சிக் கம்பம் நிறுவி கட்சிக் கொடியை பறக்க விடுகிறான்.குப்பால் அந்த வட்டத்துக்கு செயலாளர் பொறுப்பினை ஏற்கிறான்" என்றான் .
"தாமோதரன் எப்படியிருக்கிறான்.விடுதலை ஆகி வந்தாச்சா"
"தாமோதரன்..நான்..எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறோம் பட்டடைக்கல்லாக" என்றான் மூக்கன்.
பட்டடைக்கற்கள் அறிவதில்லை..தன்னை உபயோகப்படுத்தி..தன் இனத்தையே இஷ்டத்திற்கு வளைக்க காரணமாக தாங்களே இருப்பதை.
No comments:
Post a Comment