Monday, January 20, 2020

36 - பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனைகள் முடிந்து கற்பகம், கிராம அதிகாரியின் உடல்கள், அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.கிராம அதிகாரி குடும்பத்துடன் டஹ்ற்கொலை செய்து கொண்டதால், உடல்களை அவரின் உறவினர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.

கற்பகத்தின் உடலை தாமோதரனும், வாஞ்சியும் பூங்குளம் எடுத்து வந்தனர்.

கிராம அதிகாரி,மற்றும் அவர் குடும்பத்தினர் உடல்களை அவரது உறவினர்கள் மூலம் பூங்குளம்  கொண்டு வந்தார் பண்ணையார்.

தாமோதரன் அழுதபடியே இருந்தான்.நடந்தவை அனைத்திற்கும் காரணம், தன் மூடத்தனமே என்றான்.முதன்முதல் மயில்வாகனனின் கட்சிக் கொடிக்கம்பத்தைத் தான் பூங்குளத்தில் நிறுவியது முதல் ஏழரைப் பிடித்தது எனக் கதறினான்

ஈமக்கிரியைகளை, மூக்கன்,மாடசாமியின் உதவியோடு நடத்தி முடித்தான்.மயானத்துக்குப் பிரேதம் எடுத்து சென்றபோது, அவளுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

எல்லாம் முடிந்து சில நாட்கள் கழித்து வாஞ்சி, தாமோதரனை தன் தாத்தா சிதம்பரத்திடம ழைத்துச் சென்றான்.

அவனை வரவேற்ற சிதம்பரம் ஆறுதல் கூறினார்..

கற்பகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தார்.

அதில், சமையல் செய்யும் போது தீ கற்பகத்தில் ஆடையில் பற்றி எண்பது சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து வந்ததாகவும், மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை என்றும் இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட பணமும், அரசியல் அதிகாரமும் வியையாடி இருக்கக் கூடும் என்றார் சிதம்பரம்.

மேலும் சிதம்பரம் வேதனையுடன், "பணம் இருந்தால் இன்னிக்கு எந்தத் தப்பும் செய்துட்டு சட்டத்துப் பிடியில் இருந்து த்ப்பி விடலாம்" என்றார்.

கற்பகத்தின் சாவு ஒரு திட்டமிட்டக் கொலையென்றும்..மயில்வாகனன் மேல் வழக்குத் தொடரலாம் என்றும்..தாமோதரன் ,மயில்வாகனனைத் தாக்கினான் என்ற வழக்குடன் சேர்த்து இவ்வழக்கினையும் விசாரிக்கக் கோரி மனு தாக்கலாம் என்றும் கூறினார்.

தாமோதரன் சார்பில், நீதிமன்றத்தில் தானே ஆஜராகி வாதாடுவதாகவும் தெரிவித்தார்.

:ஐயா..ரொம்ப நன்றிங்க,சட்டம் அந்த மயில்வாகனனை தண்டிக்கணும்.அப்போதான், செங்கமலம், கற்பகம் ஆன்மாக்கள் சாந்தியடையும் என்றான் தாமோதரன்.  

No comments:

Post a Comment