Thursday, January 23, 2020

40 - தீர்ப்பு

அடுத்தநாள் காலை..

நீதிமன்றம் நிறைந்திருந்தது.

காலை 11 மணிக்கு தாமோதரன், மயில்வாகனன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்திருந்ததால், தாமோதரன், வாஞ்சி, சிதம்பரம்,மூக்கன் என அனைவரும் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

நீதிபதி தீர்ப்பினைப் படிக்க ஆரம்பித்தார்..

"தாமோதரனின் மகள் கற்பகம் கற்பழிக்கபப்ட்டு,திராவகம் வீசப்பட்டு இறந்ததாகச் சொல்லப்பட்ட வழக்கினையும்,
தாமோதரன்,மயில்வாகனனைத் தாக்கிய வழக்கினையும் இந்த நீதிமன்றம் ஒன்றாக இணைத்து..ஒரே வழக்காக விசாரித்தது.

நாட்டில் இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற ஆதங்கத்தில் தியாகி சிதம்பரம், நாட்டு நடப்புகளை எடுத்துரைத்தார்.

அதில் இவ் வழக்கிற்கான வாதங்களை மட்டும் இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

வழக்கில் சம்பந்தப்பட்ட கற்பகம் இன்று உயிருடன் இல்லை.பிரேத பரிசோதனை  அறிக்கை.அவர் சமையல் அறையில் சமைக்கும்போது தீ பற்றப்பட்டு உடல் முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு..சிகிச்சை பலனின்றி இறந்ததை உறுதிப்ப்டுத்தியுள்ளது.

கற்பகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக..தாமோதரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை என்பதும்,பெண்களுக்கான வன்முறைகள்,,பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருகின்றன என்பதும் கசப்பான உண்மைதான்.

சிதம்பரம், தன் வாதத்தில் சொன்னபடி மக்களை, இரும்பு வேலியாய் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை உடனே தண்டிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்,,,இது போன்ற வழக்குகளுக்கு மேல் முறையீடு கூடாது.

இந்த வழக்கில் திராவகம் வீசப்பட்டதாகவும், கற்பகம் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்ட  குற்றச்சாட்டுகள் சரியான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.

சந்தேகத்தை குற்றவாளிக்கு சாதகமாகக் கொண்டு..ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடாதிருக்கலாம்..ஆனால்..ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு மயில்வாகனனை இந்நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கின்றது.

அதேநேரம், தாமோதரன், மயில்வாகனனைத் தாக்கியதை தகுந்த ஆதாரங்களுடன், மயில்வாகனன் தரப்பு நிரூபித்துள்ளது.ஆகவே தமோதரனை குற்றவாளி என்று தீர்மானித்து..இவ்வழக்கில் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறது இந்நீதிமன்றம்.

இவ்வழக்கில், தன் தள்ளாத வயதிலும்  வந்து வாதாடிய சிதம்பரத்தை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது."

நீதிபதி, தீர்ப்பை வாசித்து முடித்ததும் , கூண்டிலிருந்து இறுகிய முகத்துடன் வெளியே வந்த தாமோதரன்..சிதம்பரத்திடம்..

"ஐயா..நான் ஏழை.சட்டத்துக்கு முன்னால அனைவரும் சமம்னு நெனச்சேன்.அனா..இப்ப இல்லையோன்னு தோணுது.எனக்கு பதவி, பணம்,செல்வாக்கு,ஆள்படை..இப்படி எதுவுமில்லை,.அதனால..நான்  தோத்துட்டேன்.ஆனா ஒன்னு..இன்னிக்கு வேணும்னா மயில்வாகனன் தப்பிக்கலாம்..ஏன்னா..இந்த சட்ட திட்டம் எல்லாம் மனுஷங்க உருவாக்கினது>

ஆனா, அந்த ஆண்டவன் கோர்ட்டுல அவன் தப்பிக்க முடியாது.

அந்தத் தீர்ப்பும் ஒருநாள் வரும்.

எனக்காக நீங்க வாதாடியற்கு நன்றி "

என்று கூறிவிட்டு காவல் அதிகாரிகளுடன்  நடந்தான்.

No comments:

Post a Comment