Monday, December 23, 2019

24 - காலச்சக்கரம்

காலச் சக்கரம் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது.

நம்மை கேட்டுக் கொண்டா சுழல்கிறது?

சுழலும் போதே..சில கசப்பான நிகழ்வுகள், சில சுவாரசியமான நினைவுகள்,சில வரவுகள், சில செலவுகள் என எல்லாவற்றினையும் உள்ளடக்கியபடியே சுழல்கிறது.

அந்த ஆண்டும் மழை பொய்த்ததால், பல ஏக்கர் நிலங்களில் பயிர்களும்..வாடி வைக்கோலாகப்போனது பூங்குளத்தில்.

ஏழை, பணக்காரன் என பாகுபாடு இன்றி அனத்துத் தர மக்களும் வறுமையின் பிடியில் சிக்கினர்.நாட்டில் பல விவசாயிகள் வறுமை தாங்காமல், கடனின் பிடியில் சிக்கித் தற்கொலை செய்து கொண்டனர்.பூங்குளம் விசாயிகள் மட்டும் விதிவிலக்கா என்ன?

கவுண்டர்..அக்கிராமத்தின் முக்கியப் புள்ளி, வசதியானவர்..இவ்வளவு நாட்கள் வசதியுடன் வாழ்த்துவிட்டு, உணவுக்குக் கூட சிரமப்படும் நிலை வந்த போது தைரியத்துடன் எதிர்கொள்ள முடியாது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார்.

சில விவசாயிகள்..தங்கள் நிலங்களை..கழுகுபோல காத்துக் கொண்டிருந்த மயில்வாகனன் போன்ற அரசியல்வாதிகளுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுவிட்டு..வேறு ஊர்களுக்குக் குடி பெயர்ந்தனர்.

நமக்கு முன்னால் ஒரு அத்தியாயத்தில் அறிமுகமாகியிருந்த சைக்கிள் கடை குப்பால், அவன் சாதியைச் சேர்ந்த மயில்வாகனனுக்கு இந்த விஷயங்களில் மிகவும் உதவி செய்து, அவரிடம் நல்ல பெயர் வாங்கி இருந்தான்.

பலர் நிலங்களை மயில்வாகனன் வளைத்துப் போட்டு இருந்தாலும், இடையில் தாமோதரன் நிலங்களும் இருந்ததால், அதையும் வளைத்துப் போட்டால்தான் தான் நினைக்கும் தொழிற்சாலையைக் கட்ட முடியும் என எண்ணி, ஒருநாள் குப்பாலை வரச்சொல்லி அவனிடம் பேசினான்.தேவைப்பட்டால் தாமோதரனைத் தீர்த்து கட்டவும் சொன்னான்.

"தலைவா..கிராமத்துல கட்சிக் கொடிக்கம்பம் நட்டு கட்சிக் கொடியை பறகக் வைத்த தாமோதரனே ..அதை வெட்டி வீழ்த்தியதை காரணம் காட்டி ஒரு போராட்டம் ஆரம்பிக்கலாம்.அதில் வன்முறையைக் கிளப்பி விட்டு..தாமோதரனைத் தீர்த்துடுவோம்" என்றான் குப்பால்.

தலித் என்ற போர்வைக்குள் இருக்கும் தாமோதரனை நேருக்கு நேராக எதிர்த்தால் சாதி சண்டை நாடு முழுதும் வந்தாலும் வந்துவிடும் என எண்ணிய மயில்வாகனன் போராட்டத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

ஆனால், அதற்கு பதிலாக..தாமோதரனின் மகளுக்கு,ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிட்டால், அந்த அவமானம் தாங்காமல், தாமோதரனைக் கொன்று விட்டு..தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லி விடலாம் என திட்டமிட்டான்.

அதை உடனே செயல்படுத்த எண்ணி ஒரு கூலிப்படையை தஞ்சாவூருக்கு அனுப்பினான்.

ஒருநாள்..கற்பகம்...கல்லூரியிலிருந்து விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.அப்போது நான்கு முரடர்கள் அவளை சுற்றிக் கொண்டு வம்புக்கு இழுத்தனர்.

அவளை இழுத்து..பக்கத்து புதர் ஒன்றில் தள்ளி..பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர்.அருகே இருந்த பூங்கா ஒன்றில்  அம்ர்ந்திருந்த வாஞ்சிநாதன்.."கற்பகம் இவ்வளவு நேரம் கல்லூரி முடிந்து திரும்பி இருக்க வேண்டுமே...இன்னமும் இந்த வழியாக வரவில்லையே" என்று எண்ணி பூங்காவிலிருந்து வெளியே வந்து சற்று நடந்தான்.

அப்போது அருகிலிருந்த புதரிலிருந்து,"காப்பாத்துங்க..காப்பாத்துங்க.." என்ற கற்பகத்தின் குரல் கேட்க..அந்த இடம் நோக்கி விரைந்தான்.

யாரோ ஆள் வரும் அரவம் கேட்க, முரடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

வாஞ்சியைப் பார்த்த கற்பகம், ஓடி வந்து அவனை கட்டிக் கொண்டு அழுதாள்.அவளை அணைத்தவாறே, ஆறுதல் சொல்லியபடியே.அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதிவரை வந்தான் அவன்.

அடுத்தநாளே, பூங்குளம் சென்ற கற்பகம், தாமோதரனிடம் ந்டந்தவற்றைக் கூறினாள்.

இது அந்த மயில்வாகனன் வேலையாய்த்தான் இருக்கும் என சந்தேகித்த தாமோதரன், அவனை சந்தித்து பழி வாங்கத் தீர்மானித்தான்.

முன்னதாக, அழுது..அழுது..வீங்கிய முகத்துடன் மாடசாமி வண்டியில் வந்த கற்பகத்தைப் பார்த்த குப்பால்..மயில்வாகனைச் சந்தித்து விஷயத்தைக் கூற எண்ணி தன் சைக்கிள் கடையை மூடிவிட்டு..ஒரு சைக்கிளில் ஏறி அடுத்த ஊர் சென்றான்.



No comments:

Post a Comment